ஜோதிடம் கேளுங்கள்

1. பரிமளா A/P கந்தசாமி, மலேசியா,
என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? என் வருங்காலக் கணவர் பற்றிக் கூறவும்.

அன்பு நிலாச்சாரல் வாசகி பரிமளா அவர்களே !
21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு , லக்னம் மகரம். தங்களின் ஜாதகத்தில் செவ்வாய் தன் சொந்த வீடான மேஷத்திலும், 5-ம் வீட்டு அதிபதியான சுக்ரன் தன் சொந்த வீடான ரிஷபத்திலும் இருப்பதால் தங்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். தங்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணைவர் நல்ல குணவானாகவும், உயர்ந்த பதவி வகிப்பவராகவும் இருப்பார். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
*********************************************************************************
2. சிந்துஜா, ஸ்ரீலங்கா.
எனக்கு எப்போது திருமணம்? எனது காதலன் என்னை ஏமாற்றுவரா? அவருக்கு வேறு பெண் தொடர்பு இருக்கிறதா? அவருக்கு என் மேல் பாசம் உண்டா? என்னுடைய தொழில் நல்லவிதமாக நடக்குமா?

அன்பு நிலாச்சாரல் வாசகி சிந்துஜா அவர்களே !
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் துலாம். தங்களின் ஜாதகப்படி தற்பொழுது சந்திர தெசை குரு புக்தி. 24-7-2010 தேதியை அடுத்து வரும் பூர்வபுண்ய ஸ்தானதிபதியான சனி புக்தி வரும்போது திருமணம் கைகூடும். தங்களின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பதால், பெற்றோரின் தேர்வுப்படி நடக்கும் திருமணம் நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும். தங்களின் ஜாதகப்படி செவ்வாய் 2-ம் வீட்டில் உள்ளதால், பணி புரிவது மூலம் தாங்கள் நல்ல நிலையை அடையலாம். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள் *************************************************************************************
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author