ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணமாகும் பாக்கியம் உண்டா? – அசோக், விழுப்புரம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் அசோக் அவர்களே!

44 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் மகரம். தங்களின் ஜாதகப்படி, குரு பகவான் தங்களின் ராசியிலிருந்து 9-ம் இடத்திற்கு மாறும் காலம் திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தங்களின் நட்சத்திர அதிபதியான புதனுக்குரிய நவ திருப்பதி க்ஷேத்திரத்தில் 3வது தலமாக விளங்கும் காய்சின வேந்தப் பெருமாள் திருக்கோயிலுக்குச் (தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) சென்று தங்களின் நட்சத்திரமான ஆயில்யம் வரும் நாளில், தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும். விரைவில் திருமணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

 *********

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எப்படிப்பட்ட மனைவி அமைவார்? எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அது முடியுமா? – வி.விஜி, மல்லியக்கரை, சேலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் விஜி அவர்களே !

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி மீனம், லக்னம் கடகம். தங்களின் ஜாதகப்படி, திருமணம் மே 2010க்குப் பிறகு கைகூடும். வருகின்ற மனைவி தங்களின் குணமறிந்து நடந்து கொள்ளக் கூடியவராக இருப்பார். சாதனைக்குச் சொந்தக்காரரான சனி லக்னத்தில் இருந்து கொண்டு 10-ல் இருக்கும் குருவைப் பார்ப்பதால், தாங்கள் எண்ணியபடி சாதனையாளராக ஆகலாம். தங்களின் எண்ணம் ஈடேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*********

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author