ஜோதிடம் கேளுங்கள்

வணக்கம். என் பெயர் க.சண்முகம். நான் 04.04.1979-இல், முற்பகல் 7.05-இற்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் பிறந்தேன். என் பலன் என்னவென்று கணித்துக் கூற முடியுமா? குரு 4-ம் இடத்தில் உச்சமாக இருப்பதால் என்ன பாதிப்பு இருக்கும்? புதன் 12-இல் நீசமானால் என்ன பாதிப்பு இருக்கும்? – க.சண்முகம், ஆத்தூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.சண்முகம் அவர்களே!
29 வயதாகும் தங்களின் ராசி மிதுனம், நட்சத்திரம் திருவாதிரை, லக்னம் மேஷம்.ஆகும். தங்கள் ஜாதகத்தில் குரு உச்ச வீட்டில் இருந்தாலும், சீராகப் பலன் கொடுக்கக் கூடிய சனியின் சாரத்தில் இருப்பதால், தங்கள் வாழ்வில் உயர்வு முதலியவை நிதானமாக வந்தாலும் நிரந்தரமாக இருக்கும். புதன் நீச்ச வீட்டில் இருந்தாலும், லக்னாதிபதியுடனும், 5-ம் வீட்டு அதிபதியுடனும் சேர்ந்திருப்பதாலும், நன்மை தரும் காலங்களில் இடையூறு இன்றி நல்ல பலன்களைத் தருவார். லக்னம் மேஷமாகையால், தாங்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருப்பீர்கள். சுக்ரன் 11-ல் உள்ளார். இது நன்மை தரும் அமைப்பாகும்.

*****

வணக்கம். என் பெயர் ச. மதன்குமார். நான் 30.09.1983-இல், மதியம் 12 மணிக்கு, வேலூரில் பிறந்தேன். என் வருங்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? என் திருமணம் எப்போது நடக்கும்? என் வருங்கால மனைவி எப்படி இருப்பார்? – ச. மதன்குமார்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.மதன்குமார் அவர்களே!
25 வயதாகும் தங்களின் ராசி மிதுனம்,.நட்சத்திரம் திருவாதிரை, லக்னம் தனுசு ஆகும். திருமணம், குரு தங்கள் ராசியிலிருந்து 9-ம் வீட்டுக்குச் செல்லும் போது நடைபெறும். நல்ல, படித்த, பண்பான மனைவி தங்களுக்கு வாய்ப்பாள். 5-ம் வீட்டு அதிபதியான செவ்வாய், 9-ம் வீட்டில் இருப்பதால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.

*****

வணக்கம். நான் 13.06.1958-இல், பிற்பகல் 5.30-க்கு, விருதுநகரில் பிறந்தேன். எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா? – சந்திரசேகர், விருதுநகர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சந்திரசேகர் அவர்களே!
தற்போது தங்களுக்கு 50 வயது ஆகிறது. தங்களின் ராசி மேஷம், நட்சத்திரம் பரணி, லக்னம் விருச்சிகம். 5-ம் வீட்டு அதிபதியான குருவின் பார்வை 5-ம் வீட்டில் உள்ள வீடு, கட்டிடங்களுக்கு அதிபதியான செவ்வாயின் மேல் படுவதால் தங்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டு.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author