ஜோதிடம் கேளுங்கள்

எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? – ஜி. கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கண்ணன் அவர்களே !

33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம் லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகப்படி, சுக்ர திசை, சுக்ர புக்தி, 07.05.2013 வரை நடைபெறுகிறது. தாங்கள் வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர பகவானை வழிபட்டு வர தங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். வளமான வாழ்க்கை பெற, நிலாச் சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*************

இதுவரை மிகச் சிறப்புடன் வாழ்ந்த எனது எஞ்சிய காலம் எப்படி இருக்கும்? – எஸ். மோகன்ராம், சேலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மோகன்ராம் அவர்களே !

65 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில், சூரியன், புதன், குரு, சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் பூர்வ புண்யாதிபதியான சனியின் பார்வையைப் பெறுவதால், எஞ்சிய காலமும் நன்றாக அமையும். வளமான வாழ்வு தொடர நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், .
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author