ஜோதிடம் கேளுங்கள்

என் ராசிப்படி நான் சொந்தத் தொழில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதா? எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? மனைவியின் குணம் மற்றும் குழந்தைப்பேறு பற்றி சொல்லவும். – ஏ.நாகேஸ்வரன், விருதுநகர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் நாகேஸ்வரன் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, 4-ம் பாதம். தங்களின் ராசி மற்றும் லக்னம் இரண்டும் மீனம் ஆகும். தங்களின் ஜாதகப்படி வேலைக்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. குரு பகவான் 2012 மே மாதம் ரிஷப ராசிக்கு வரும் காலம் தங்களின் திருமணம் கைகூடிவிடும். நல்ல குணமுள்ள மனைவி அமைவாள். தாமதமான குழந்தை பாக்கியம் உண்டு. நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******

எனக்கு பெண் குழந்தை 08.11.2011 அன்று காலை 3.20 க்கு பிறந்துள்ளது. எங்களுக்கும் குழந்தைக்கும் வருங்காலம் எப்படி இருக்கும்? எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? – வாசகி, பெங்களூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி அவர்களே !

தங்கள் குழந்தையின் நட்சத்திரம் ரேவதி 4-ம் பாதம், ராசி மீனம். ‘சீ’ என்ற எழுத்தில் பெயர் வைக்கலாம். குழந்தையின் எதிர்காலமும், உங்கள் எதிர்காலமும் நன்றாக உள்ளது. தங்களுக்கு நல்ல வாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துகள்.

********

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author