ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு சாஃட்வேர் துறையில் வேலை கிடைக்குமா? அல்லது ஏற்றுமதி, இறக்குமதி தொழிலைச் செய்யலாமா? எப்பொழுது திருமணம் நடக்கும்? – பி.முரளி, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகர் முரளி அவர்களே!
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் மீனம் ஆகும். தங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தைக் குறிக்கும் சூரியன் 11-ல் நிற்பதால், தாங்கள் கணினி மற்றும் மென்பொருள் துறையில் பணி புரியலாம். வேலை, 2009 செப்டம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும். திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்கள் நட்சத்திர நாயகனான சந்திரனை திங்கள் கிழமை தோறும் வழிபட்டு வர, வளம் பல கூடும். தாங்கள் விரும்பிய நல் வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எனக்கு வாகன யோகம் இருக்கிறதா? நான் டிரைவிங் கற்று வாகனம் வாங்க எண்ணியிருக்கிறேன். – கே.மஞ்சுளா, கொழும்பு

அன்பு நிலாச்சாரல் வாசகி மஞ்சுளா அவர்களே!
59 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம் ராசி கும்பம், லக்னம் மகரம் ஆகும். தங்கள் ஜாதகத்தில் வாகன யோகத்தைக் குறிக்கும் செவ்வாய் 8-ல் சனியுடன் அமர்ந்துள்ளதால், தாங்கள் வாடகை வாகனத்தில் பயணம் செய்தலே நன்று. தாங்கள் விரும்பிய நல் வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

கடந்த இரண்டு வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல மாற்றம் வருமா? – டி.எஸ்.ராஜன், அதிராம்பட்டினம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜன் அவர்களே!
44 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பரணி, ராசி மேஷம், லக்னம் சிம்மம் ஆகும். சனி பகவான் தங்கள் ராசியிலிருந்து தற்பொழுது 5-ம் இடத்தில் உள்ளார். அவர் வளம் பல நல்கும் 6-ம் இடத்திற்கு செப்டம்பர் மாதம் முதல் செல்ல இருக்கிறார். இந்தக் காலம் முதல் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும்,
" மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண்மால் ஆங்கே-பொருந்தியும்
நின்றுலகம் உண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்
அன்றுலகம் தாயோ னடி."
என்ற பாடலைப் பாடி வாருங்கள்.

தாங்கள் மீண்டும் பழைய ஆரோக்கியத்தைப் பெற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எப்பொழுது எனக்கு திருமணம் ஆகும்? அல்லது மேற்படிப்பு படிப்பேனா? எட்டில் கேது இருப்பதனால் ஏதாவது கெடு பலனா? – மஞ்சு, மதுரை

அன்பு நிலாச்சாரல் வாசகி மஞ்சு அவர்களே!
21 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம், லக்னம் மகரம் ஆகும். தங்களின்
ஜாதகப்படி19-10-2010 வரை நடைபெறும் சுக்கிர திசை சந்திர புத்தி தங்களுக்கு திருமணத்தைக் கொடுக்கும். அதற்குள் வேண்டிய படிப்பை படித்து, தங்களின் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். 8-ல் கேது இருப்பது குறித்து கவலைப்பட வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் நாக தேவதையை வழிபட்டு வாருங்கள். நல்ல வளமான வாழ்க்கை பெற, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author