ஜோதிடம் கேளுங்கள்

வணக்கம். என் மகளின் ஜாதகப்படி இந்தியக் குடிமைப் பணியில் பணியாற்ற வாய்ப்பிருக்கிறத  எனத் தெரிவிக்கவும். அவள் ஜாதகப்படி என்ன படிப்பு படிக்க வைக்கலாம்? – ஷாலினியின் தாய், பழனி.

அன்பு நிலாச்சாரல் வாசகி ஷாலினியின் அம்மா அவர்களே!

16 வயதாகும் தங்களது மகளின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் ரிஷபம் ஆகும்.  அவரது ஜாதகப்படி, பொறியியல் படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தங்கள் மகளின் கல்வி சிறந்து விளங்குவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                                ***************

என் திருமணம் தள்ளிக் கொண்டே போவதால் என் பெற்றோர்கள் மிகவும் வருத்தப் படுகிறார்கள். என் திருமணம் எப்பொழுது நடக்கும்? எனக்கு நல்ல பதில் சொல்லவும். – டி.தனலட்சுமி, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி தனலஷ்மி அவர்களே!

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு , லக்னம் ரிஷபம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு வருவதோடு, தங்களின் குல தெய்வத்தையும் வழிபட்டு வாருங்கள். திருமணம் 2010 மே மாத வாக்கில் கை கூடும். நல்லதொரு மண வாழ்க்கை அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                               ***************

எனக்கு ஐம்பத்தி மூன்று வயதாகிறது. என்ன விதமான தொழில், எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள். சொத்துப் பிரிப்பு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் எனது வழக்கு எப்பொழுது முடிவுக்கு வரும்?.ஸ்ரீதரன்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஸ்ரீதரன் அவர்களே!

54 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம் , ராசி விருச்சிகம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருப்பதால், தாங்கள் மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருட்கள் மற்றும் அது சம்பந்தமான ஸ்டேஷனரி பொருட்களை  சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்யலாம். குரு பகவான் மீன ராசிக்கு வரும் காலம் தாங்கள் இந்த வியாபாரத்தை ஆரம்பிக்கலாம்.  வழக்கு சம்பந்தமாக, தங்கள் மனைவியின் நட்சத்திரமான பூராடம் வரும் நாளில் திருமகளைத் துதித்து வாருங்கள். ஓராண்டுக்குள் வழக்கு நல்ல விதமாக முடிந்து விடும். தங்களின் எண்ணங்கள் பூர்த்தியாவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

                                                              ***************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,சித்தாந்த நன்மணி.
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.”

About The Author