ஜோதிடம் கேளுங்கள்

நான் விவாகரத்தானவள். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். இனிமேல் என் கணவருடன் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பிருக்கிறதா? என் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? – செல்வினா, முன்னார்.

அன்பு நிலாச்சாரல் வாசகி செல்வினா அவர்களே!

35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்ராடம், ராசி மகரம் லக்னம் கும்பம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், லக்னத்தில் குரு இருந்து கொண்டு 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பதால், தாங்கள் மீண்டும் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் வாய்ப்புக்கள் உண்டு. தங்களின் குல தெய்வத்தை வழிபட்டு வருவதோடு, மனக்கசப்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, “வருந்தா வகைஎன்
மனத்தா மரையினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிட மாக இனி எனக்குப் பொருந்தா தொரு பொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா நதை நல்கும் மெல்லியலே.” என்ற பாடலைப் படித்து வாருங்கள். தங்கள் மகளின் நட்சத்திரம் அசுவினி , ராசி மேஷம். தங்கள் மகள் ஜாதகத்தில் சந்திரன் குருவின் 9-ம் பார்வையைப் பெறுவதால், எதிர்காலம் நன்றாக இருக்கும். சிறப்பான வாழ்க்கை அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

எனக்குத் திருமணம் எப்பொழுது நடைபெறும்? பெண் சொந்தத்தில் அமையுமா, அல்ல்து அன்னியமாக இருக்குமா? கைலாசம், மதுக்கூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கைலாசம் அவர்களே!

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மகம் , ராசி சிம்மம், லக்னம்விருச்சிகம் ஆகும். தங்களுக்கு திருமணம் அந்நியத்தில் அமைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தங்களின் ஜாதகத்தில் குரு தங்களின் ராசியிலிருந்து 7-ம் இடமான கும்பத்திற்கு டிசம்பர் 2009 முதல் மாறுகிறார். இந்தக்காலக்கட்டத்தில் தங்களுக்குத் திருமணம் கை கூடும். நல்ல மண வாழ்க்கை
அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

வீட்டில் சுவாமி சிலைகளை வைத்துக் கும்பிடலாமா? அதற்கு தினம் அபிஷேகம் செய்ய வேண்டுமா? நான் வேலைக்குச் செல்வதால் அபிஷேகம் செய்ய முடியாது. – லக்ஷ்மி,விருத்தாச்சலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி லக்ஷ்மி அவர்களே!

34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி, லக்னம் கடகம்ஆகும். தாங்கள் சிறிய சுவாமி சிலைகளை வைத்து, தினமும் மலர்களைத் தூவிவழிபடலாம். விசேஷமான மற்றும் பண்டிகைக் காலங்களில் தாங்கள் அபிஷேகம் செய்து வழிபடலாம். தங்களின் ஜாதகத்தில் குரு -9ல் உள்ளதால், தங்களுக்குதெய்வ பலமும் அருளும் உண்டு.

******

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author