ஜோதிடம் கேளுங்கள்

சொந்தத் தொழில் செய்ய முயற்சித்தும் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை. கடன் கழுத்தளவு நிற்கிறது. என் எதிர்காலம் எப்படி இருக்கும்? – சரவணன், கம்பம்
  
அன்பு நிலாச்சாரல் வாசகர் சரவணன் அவர்களே!
  
41 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில் 10-ம் இடத்தில் செவ்வாய், குரு, புதன் ஆகிய மூன்றும் இருப்பதால், தங்களுக்கு சொந்தத் தொழிலை விட வேலையில் நல்ல பெயர் பெறுவதற்கான வாய்ப்புக்கள் நன்றாக உள்ளன. ஞாயிற்றுக்கிழமை தோறும் பைரவரை தரிசனம் செய்து வாருங்கள். கடன் தொல்லையும் தீரும், எதிர்காலமும் வளமாக அமையும். சிறப்பான பொருளாதார நிலை அடைய நிலாச்சாரல் தங்களை
வாழ்த்துகிறது.
  

*****

என்னுடைய தொழில் எப்படி இருக்கும்? வெற்றிகரமாக நடத்த முடியவில்லையே! திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இல்லை. நல்ல எதிர்காலம் அமையுமா? – ராஜகோபால், வேலூர், நாமக்கல் மாவட்டம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜ கோபால் அவர்களே !
  
31 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம், லக்னம் கன்னி ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு 9-ல் நல்ல நிலையில் இருக்கிறார். எதற்கும் கவலை வேண்டாம். தாங்கள் தங்கள் ராசி மற்றும் லக்ன அதிபதியான சுக்ரனை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வர, தங்களின் வியாபாரம் மற்றும் திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து விடும். தைரியமான மன நிலை பெற
துர்க்கையை வழிபட்டு வாருங்கள். எதிர்காலம் வளமாக அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
  

*****

  
பூர்வீகச் சொத்து கிடைக்குமா? பதவி உயர்வு எப்போது அடைவேன்? – வெங்கடாச்சலபதி, திருநெல்வேலி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் வேங்கடாசலபதி அவர்களே !
  
45 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் கோசார குரு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் வீட்டுக்கு செல்கிறார். அவர் 9-ம் வீட்டுக்கு செல்லும் காலம் பூர்வீகச் சொத்து தங்களுக்கு கிடைக்கும். பதவி உயர்வு 2010 மே மாதத்திற்கு மேல் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வரவும். விரைவில்
பதவி உயர்வு கிட்டவும், பூர்வீகச் சொத்தைப் பெறுவதற்கும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
  

*****

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
  
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author