ஜோதிடம் கேளுங்கள்

நான் திருமணமான மூன்று மாதங்களிலேயே கணவரைப் பிரிந்து விட்டேன். மீண்டும் சேருவோமா? பரிகாரம் இருக்கிறதா? தயவு செய்து கூறுங்கள்.

அன்பு நிலாச்சாரல் வாசகி பரிமளா அவர்களே !

32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் தனுசு. தங்களின் ஜாதகப்படி செவ்வாய் திசை, சுக்ர புக்தி 13.01.2012 வரை நடைபெறுகிறது. இது தங்களுக்கு மீண்டும் குடும்ப வாழ்வை அளிக்கும் காலமாகும். தாங்கள் வெள்ளிக்கிழமை தோறும் திருமகளை வழிபட்டு, நெய் விளக்கேற்றி, துளசி மாலை அணிவித்து வாருங்கள். குரு பகவான் மே மாதம் முதல் 5-ம் வீட்டுக்கு செல்லும் காலம் தாங்கள் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் யோகம் கிட்டும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********************

இப்போது என் மனைவியால் கடும் தொல்லைகளை அனுபவிக்கிறேன். தற்போதைய கிரக நிலையில் எந்தக் கோவிலுக்கு சென்று விளக்குப் போட வேண்டும்?

அன்பு நிலாச்சாரல் வாசகர் சுரேஷ்வர் அவர்களே !

42 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் தனுசு. தாங்கள் தினமும் பிள்ளையாரை வழிபட்டு, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வாருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தங்களின் மனக் கவலை நீங்கி நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

***********************

பதில்களை வழங்கியவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author