ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது நடக்கும்? – சபாஸ்டியன், கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் செபாஸ்டியன் அவர்களே !

45 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் மகரம். தொடர்ந்து முயற்சிக்க, மே மாதம் 2010க்குள் திருமணம் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தங்களின் விருப்பம் நிறைவேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

எனக்கு இதுவரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் சினிமாத் துறையில் புகைப்படத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன். இதில் நல்ல வாய்ப்புகள் கிடைக்குமா? கிரானைட் கல் தொழிலிலும் ஈடுபட்டு உள்ளேன். என் மனைவிக்கு அரசுப் பணி இருக்கிறது. எனக்கு எந்தத் தொழில் நிலையாக இருக்கும்? – ரூபேஷ்குமார், அரவக்குறிச்சி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரூபேஷ் குமார் அவர்களே !

34 வயதாகும் தங்களின் நட்சத்திரம் புனர்பூசம், ராசி மிதுனம், லக்னம் துலாம். தங்களின் லக்னாதிபதியான சுக்ரனை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வர தாங்கள் மேற்கொண்டிருக்கும் புகைப்படத் தொழிலில் மேலும் வளர்ச்சியும், புகழும் பெறலாம். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

நான் தற்பொழுது துணி தயாரிக்கும் வேலை பார்த்து வருகிறேன். பல வருடங்களாக கடன் தொல்லையில் உள்ளேன். எனது எல்லாக் கடன்களும் எப்பொழுது தீரும்? விவசாயம் செய்யலாமா? அதனால் எனக்குப் பலன் உண்டாகுமா என்று எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். – என். ரெங்கநாதன், கோயம்புத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரெங்கநாதன் அவர்களே !

50 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் மேஷம் . தங்களின் கடன் தொல்லை தீர, சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் அன்று கடனை அடைக்க ஆரம்பித்தால், கடன் தொல்லை தீர்ந்து விடும். மேலும், பிரதோஷமன்று சிவனை வழிபட்டு வர, தங்களின் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தங்களின் லக்னம் பூமிகாரகனான செவ்வாய் ஆட்சி பெறும் மேஷம் என்பதால், தாங்கள் விவசாயம் செய்யலாம். அது லாபகரமாகவே இருக்கும். தங்களின் வளமான வாழ்க்கைக்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author