ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய திருமணம் காலதாமதமாகிக் கொண்டே போகிறது. எப்போது நடக்கும்? காதல் திருமணமாக இருக்குமா அல்லது பெற்றோர்கள் பார்த்து செய்வதாக அமையுமா? – பிரசாந்தி, சிதம்பரம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி பிரசாந்தி அவர்களே !

26 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி, லக்னம் கும்பம். தங்களின் ஜாதகப்படி ராகு திசை சனி புக்தி 04-10-2011 வரை நடைபெறுகிறது. இந்தக் காலத்திற்குள் பெற்றோர்களின் ஆசியுடன் தங்கள் திருமணம் நடக்கும். குரு 11-ல் இருப்பதால், தங்களின் மணவாழ்வு நன்றாக இருக்கும். தங்களின் வாழ்க்கை வளமாக அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்

***************

எனது மகளின் ஜாதகத்தில் திருமண யோகம் இருக்கிறதா? திருமணம் ஆகி ஒரு வாரத்தில் வந்துவிட்டாள். அவளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? – அனுஷா, தூத்துக்குடி

அன்பு நிலாச்சாரல் வாசகி அனுஷா அவர்களே !

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் ரிஷபம். தங்களின் ஜாதகத்தில், லக்னத்தில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் நாக தெய்வத்தை வழிபட்டு, வாரணம் ஆயிரம் என்ற ஆண்டாள் பாடலைப் படித்து வாருங்கள். மீண்டும் திருமண யோகம் கை கூடுவதோடு எதிர்காலமும் வளமாக இருக்கும். தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள் .

**********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author