ரிஷபன் கவிதைகள் (1)

காற்று உருட்டிக்
கொண்டிருக்கிறது.
அதன் பார்வையில் படும்
எல்லாவற்றையும்!
உன் பார்வையைப் போல..
என் மனதை நீயும்
உருட்டிக் கொண்டிருக்கிறாய்..

என் வார்த்தைகள்
சொல்லத் தவறியதை
என் பார்வை உனக்கு
உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது.
புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலான
கால இடைவெளி
இப்போது நமக்குள்ளும்..

தன் ரணங்களைத் தானே
நக்கிக் கொள்ளும்
குட்டிப் பூனையாய்
என் மனசும்..
காயங்களை ஆற்றிக் கொண்டு
உன் பதிலுக்காய்க்
காத்திருப்பதில் என் காலங்கள்..

About The Author