குறுங்கவிதைகள்

என்னைப் பார்த்திராதவர்களுக்கு
என் பெயர் ஒரு
அடையாளம் மட்டுமே..
என்னை அறிந்தவர்களுக்கு
அப்படித்தான்
என் மனசு!

******

என்ன பெயரிட்டு
அழைப்பது என்று
யோசித்து முடிப்பதற்குள்
பறந்து போய் விட்டது
அந்தக் குருவி.

******

மின் கம்பத்தில்
தொங்கும்
ஒவ்வொரு பட்டமும்
சொல்கிறது..
ஏதோ ஒரு சிறுவனின்
விண்ணைத் தொடும்
முயற்சியை..!

******

About The Author

1 Comment

  1. K.Siva(Fr)

    காதல் என்றோர் மலரை,கைஜில் எடுத்துக் கொண்டோன், பாதை என்னும் புதிய, பறுவம்மிக்க பஜிரை, வழமாய் யா(ஆ)க்கிக் கொண்டோன்,உலகை மறக்கும் புரியா, உணர்வே என்று சொல்வேன். ” உணர்வு ” ++கா.சிவா++(பிறாண்ஸ்)

Comments are closed.