குறுங்கவிதைகள்

நாம் சந்தித்த
மரத்தடியில்
தேடிக் கொண்டிருந்தேன்
வெகுநேரம்
தொலைந்து போன
என் மனதை.

******

எப்போதும் தாயம்
விழுவதில்லை
அதிலும் குறிப்பாய்
தாயம் தேவைப்படும்போது
ஆனாலும்
ஆட்டம் தொடர்கிறது
அதன் போக்கில்

******

நகர்ந்து கொண்டுதான்
இருக்கிறோம்
ஆனால் உலகம்
சொல்கிறது
நாம் இன்னும்
அதே இடத்தில்
நிற்பதாய்.

About The Author

1 Comment

  1. harani

    அன்புள்ள ரிஷபன்
    உங்கள் படைப்புக்கள் மனதைத் தொட்டன. தொடருங்கள். வாழ்த்துக்கள். உறரணி

Comments are closed.