ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வரன் பார்த்துக்கொண்டு உள்ளனர். வரன் உறவிற்குள் அமையுமா அல்லது வெளியிடத்தில் அமையுமா என தயவு செய்து தெரிவிக்கவும். – சக்திவேல், கரூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சக்திவேல் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீடம், ராசி ரிஷபம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி மணமகள் தாய் வழி உறவினருக்கு சொந்தம் உடையவராக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******


நான் பதினெட்டு மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறேன். இதற்கு பில்லி சூன்யம் செய்வினையே காரணம் என்று சொல்கிறார்கள். இதிலிருந்து நான் எப்பொழுது மீண்டு வந்து இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும்? – கணேஷ், மதுரை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கணேஷ் அவர்களே !

44 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரட்டாதி, ராசி மீனம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருப்பதால், எந்த தீய சக்தியும் அண்டாது. தினமும் துளசியை வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை தோறும் பித்தளைக் கலசத்தில் நீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு, அதனை தாங்கள் வழிபடும் இடத்தில் வைத்து, திருமகள் துதியைச் சொல்லி கலச நீரை தாங்கள் புழங்கும் இடத்தில் தெளித்து வர, இல்லம் சுபிட்சமாக விளங்கும். 2009 டிசம்பர் மாதம் முதல் குரு பகவான் தங்கள் லக்னமான துலாமிற்குச் செல்லும் காலம் தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் இருக்கும். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

நான் சொந்தமாக ஒரு ஜெராக்ஸ் மிஷின் வாங்க உள்ளேன். என்னுடைய நேரம் இப்பொழுது எப்படி இருக்கிறது? – டி.கே.ராஜேஷ், சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜேஷ் அவர்களே !

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ராசிப்படி, குரு பகவான் வளம் பல தரும் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். இந்த சிறப்பான காலத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளவும். தாங்கள் சொந்தமாக ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கி நல்ல நிலைக்கு உயர்வீர்கள். வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author