ஜோதிடம் கேளுங்கள்

வணக்கம். என் பெயர் பிரபு. நான் 17.03.1982-இல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தலிங்க மடத்தில் பிறந்தேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? என் திருமணம் எப்போது நடக்கும்? என் வருங்கால மனைவி சொந்தத்தில் இருந்து கிடைப்பாரா? அல்லது வெளியில் இருந்தா கிடைப்பாரா? – பிரபு, சித்தலிங்க மடம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.பிரபு அவர்களே!
27 வயதாகும் தங்களின் ராசி விருச்சிகம், நட்சத்திரம் கேட்டை, லக்னம் கும்பம் ஆகும். தங்கள் ஜாதகப்படி 2, 11-க்கு உரிய குரு மே மாதம் முதல் 12-ம் இடத்துக்குச் சென்று, தன்னுடைய 7-ம் பார்வையால் 6-ம் வீ ட்டைப் பார்க்கிறபடியால், தாங்கள் விரைவில் நல்ல வேலையில் அமர்வீர்கள். டிசம்பர் 2009 குரு பெயர்ச்சியின்போது, குரு தங்களின் லக்னத்திற்குச் சென்று 5-ம் வீட்டைப் பார்ப்பதால், 2009 டிசம்பருக்கு மேல் 2010 மார்ச் மாதத்திற்குள் திருமணம் கைகூடிவிடும். உங்கள் வருங்கால மனைவி சொந்தத்தில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

*****

என் பெயர் கெளசல்யா. நான் 26.06.1983-இல், மயூரமில் அதிகாலை 10.10-இற்குப் பிறந்தேன். என் திருமணம் கைகூடுவதில் சில பிரச்சினைகள் எழுவதால் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. என் திருமணம் நல்லவிதமாக எப்போது கைகூடும் எனச் சொல்ல முடியுமா? அப்படிக் கிடைக்கும் வரனைப் பற்றியும் சொல்லமுடியுமா? – கெளசல்யா, மயூரம்

அன்பு நிலாச்சாரல் வாசகி கௌசல்யா அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் சிம்மம். தங்களின் திருமணம் விரைவில் கைகூட, தாங்கள் தினமும் பிள்ளையாரை (குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி அன்று அவசியம்) வழிபடவும். 5-ல் கேது உள்ளதால், வெள்ளிக்கிழமை நாக தேவதையை ஆராதித்து வரவும். மேலும், 16 வெள்ளிக்கிழமைகள் தோறும் தொடர்ந்து இல்லத்தில், துளசி பாடலைச் சொல்லி திருமகள் படம் முன் தீபமேற்றி வர, திருமணம் ஜுலை மாதத்திற்குள் கை கூடிவிடும். தங்களின் திருமணம் விரைவில் கை கூட நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

******

வணக்கம். 20.8.1976ல் அம்பாசமுத்திரத்தில் பிறந்தேன். எனக்கு எப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும்? – ராஜாராமன், அம்பாசமுத்திரம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. அருள்குமார் ராஜாராமன் அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீடம், ராசி ரிஷபம், லக்னம் விருச்சிகம். தற்போது தங்களுக்கு 23-10-09 வரை குரு திசை சூரிய புக்தி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் சந்திர புக்தியில் தங்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். 24-11-2014 முதல் தங்களுக்குச் சனி திசை ஆரம்பமாகிறது. சனி 9-ம் வீட்டில் இருப்பதால் நிலபுலன் சேர்க்கை, வாகன யோகம் ஆகியவற்றை சனி அளிப்பார். சனி தனது நட்சத்திரத்திலிருப்பதால், நிதானமான முன்னேற்றம், நிரந்தர லாபம் ஆகியவை கிட்டும். இந்தக் காலகட்டத்தில் வாகனம் முதலியவை ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது. சளித் தொந்தரவுகள் அணுகாதவாறு ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் சனி தரும் நன்மைகளை அனுபவிக்க முடியும். துலாக்கோலைப் போல் செயல்படும் சனி நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருவதால், அதிக நல்ல காரியங்களை செய்யுங்கள்; நீங்களும் சனி திசையில் நற்பலன்களைப் பெறலாம்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. s.kanagaraj

    என்னுடைய பிரந்த நால் 20.06.1964(இரவு 10 மனி).
    எனக்கு பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?
    ச.கனகராஜ்
    சன்கரன்கோவில்

Comments are closed.