ஜோதிடம் கேளுங்கள்

நான் சொந்தத் தொழில் செய்தால் நன்றாக இருக்குமா? – போஜராஜன், மதுரை

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு போஜராஜன் அவர்களே!
33 வயதாகும் தங்களின் லக்னம் கடகம்; ராசி கன்னி; நட்சத்திரம் சித்திரை 2-ம் பாதம். தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்ததில், சொந்தத் தொழில் செய்வதைக் காட்டிலும், நிறுவனத்தில் பணி செய்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

*******

நான் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடய எதிர்காலம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? – சாமி, துபாய்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு சாமி அவர்களே!
33 வயதாகும் தங்களின் லக்னம் கடகம்; ராசி-மகரம்; நட்சத்திரம் அவிட்டம் 2-ம் பாதம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு 9-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்களின் எதிர்கால வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

******

சொந்த வீடு கட்டும் யோகம் எனக்கு இருக்கிறதா? – சிவகுமார், குன்னூர்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சிவகுமார் அவர்களே!
35 வயதாகும் தங்களின் லக்னம் ரிஷபம்; ராசி கும்பம்; நட்சத்திரம்-பூரட்டாதி 1-ம் பாதம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி பாக்ய வீடான 9-ல் அமர்ந்திருப்பதாலும், தங்களின் 4-ம் வீட்டை, 4-ம், 5-ம், 11-ம் அதிபதிகள் பார்ப்பதாலும், சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளது.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

3 Comments

  1. M.Srinivasan

    நா‌ன் எம்.பி.ஏ படித்துவிட்டு ஒரு கம்பனியில் வேலை செய்கிறே‌ன். மனதில் நிம்மதி என்பது துளிகூட இல்லாமல் வேலை செய்கிறே‌ன். என்னுடைய எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. நா‌ன் வாழ்கையில் வெற்றி கிடைக்குமா என்பதை ‌நீ‌ங்க‌ள் தான் நல்ல அறிவுரை சொல்லவேண்டும்
    இப்படிக்கு
    மு.சினிவாசன்.

  2. sivakumart

    ரொம்ப ரொம்ப நான்றீ சந்தோசம் இப்படிக்கு சிவகுமார் குன்னூர்

Comments are closed.