ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது. திருமணமாகிவிட்டாலும் இன்னும் வேலை இல்லை. என்னுடைய உடல்நிலை வேறு சரியில்லை. சிறுநீரகத்திற்கருகில் ஒரு ஆபரேஷன் செய்திருக்கிறேன். சோகத்தில் இருக்கும் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள். – ஆர்.ஸ்ரீபத், தாம்பரம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஸ்ரீபத் அவர்களே!

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் மிதுனம் ஆகும். மனித வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரமாகும். மனித மனம் மகத்தான சக்தி கொண்டது. சுய பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றைக் களைந்து விட்டு உங்களுக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். நினைத்ததை சாதிக்கலாம். தங்களின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்தைக் குறிக்கும் சந்திரன் 9-ம் இடத்தில் உள்ளதால் தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். தாங்கள் தங்களின் மன தைரியத்தை வளர்த்துக் கொண்டு செயல்பட்டால், வாழ்க்கை ஏற்றம் தரக்கூடிய விதமாக அமையும். மேலும் டிசம்பர் மாதம் குரு பகவான் மாறும் காலம் தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வாருங்கள். மன தைரியம் பெறுவதோடு, விரும்பிய வாழ்க்கையும் அமையும் . எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க, "கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவுலகுக்கு அள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே " என்ற பாடலை சொல்லி வாருங்கள். மன அமைதியும், நல்ல வாழ்க்கையும் அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

********

எனக்கு எப்போது கடன்கள் தீரும். என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமா, வருமானம் கூடுமா? வருமானம் கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? கையில் காசு தங்காமல் அனைத்தும் செலவழிந்து விடுகின்றதே? – என்.விஸ்வநாதன், பட்டுக்கோட்டை.

அன்பு நிலாச்சாரல் விஸ்வநாதன் அவர்களே!

55 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, 22-01-2012 வரை புதன் திசை சுக்கிர புத்தி நடைபெறுகிறது. இந்தக் காலகட்டத்திற்குள் கடன் தொல்லை தீர்வதோடு, தங்களின் வருமானமும் உயரும். சுக்ரன் தங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உள்ளதால், வெள்ளிக்கிழமை தோறும் திருமகளை வழிபட்டு வரவும். சொத்து தங்கள் பெயரில் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. குடும்ப உறுப்பினரின் பெயரில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் கடன் தொல்லை தீரவும், சிறப்பான பொருளாதாரம் பெறவும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author