ஜோதிடம் கேளுங்கள்

எனது கணவர் என்னிடம் பேசுவதையே தவிர்க்கிறார். பெற்றோர் பார்த்து வைத்த திருமணமானாலும், திருமணத்திற்கு முன்பே மூன்று மாதம் காதலித்தோம். இப்போது என்னை வேண்டாம் என்று சொல்கிறார். எனக்கு என்னுடைய வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா? – சத்யபிரியா, கோயம்புத்தூர்

அன்பு நிலாச்சாரல் வாசகி சத்யபிரியா அவர்களே!
22 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி, லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு 5-லும், மணவாழ்வைக் குறிக்கும் சுக்ரன் 9-ம் இடத்திலும் இருப்பதால் தங்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும். தற்பொழுது தங்களுக்கு ராகு திசை, ராகு புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, தாங்கள் தினமும் "அரவெனும் இராகு ஐயனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி! ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி! ராகுக் கனியே ரம்யா போற்றி!” என்ற பாடலை படித்து வாருங்கள். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு வாழ்வில் பல வளம் வந்து சேரும். நல்ல மணவாழ்வு அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******

எனது வேலை நிலைக்குமா? – சொக்கலிங்கம், புதுக்கோட்டை

அன்பு நிலாச்சாரல் வாசகர் சொக்கலிங்கம் அவர்களே!
56 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி சந்திரனை வழிபட்டு வாருங்கள். தங்களின் வேலை நிலைக்கும். தாங்கள் வளம் பல பெற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

எனக்கு எல்லாமே தடைகளாக உள்ளன. என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என் மீது அன்புடன் இருக்கிறார்கள். ஆனால் என் பெற்றோருக்கு பணம் இருந்தும் அவர்களுக்கு என்னைப் படிக்க வைக்க மனம் இருந்தும் படிப்பிற்கு தடை ஏற்பட்டது. நினைத்த படிப்பு படிக்க முடியவில்லை. மேலும் தற்போது திருமணம் முடிந்து விட்ட நிலையில் என் கணவரும் படிக்க வைக்க விரும்பினார். அப்போதும் தடை ஏற்பட்டது. குழந்தையையும் பிரசவத்தின்போது இழந்தேன். இதற்கு முன்பும் ஒரு முறை கரு கலைந்து விட்டது. தற்போது வேலையும் கிடைக்கவில்லை. தற்போது பொருளாதார ரீதியிலும் பின்னடைவாக உள்ளது. என் ஜாதகப்படி இனி என்ன நடக்கும்? – பாலசங்கரி, திருநெல்வேலி

அன்பு நிலாச்சாரல் வாசகி பாலசங்கரி அவர்களே!
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகத்தில், குரு லக்னத்தில் இருந்துகொண்டு 5, 7, 9 வீடுகளைப் பார்ப்பதால், வாழ்க்கை வளமாக இருக்கும். தங்களின் துயர் தீர, பிரதோஷம் அன்று சிவனை வழிபட்டு வாருங்கள். "ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய் வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்த மான சரணரவிந்தத் தவளநிறக்கானந்தம் ஆடரங்காம் எம்பிரான்முடிக்கண்ணியதே" என்ற பாடலைப் படித்து வாருங்கள். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. uma

    ரொம்ப நல்லாஇருக்கு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிரது

Comments are closed.