ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு அரசாங்க வேலை எப்போது கிடைக்கும்? – கார்த்திகா, சேலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி கார்த்திகா அவர்களே!

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் மிதுனம் ஆகும். தங்களின் லக்னத்திலிருந்து 11-மிடத்திற்கு குரு பகவான் 2011 மே மாதம் முதல் மாறி, அங்கு இரு வருட காலம் தங்குகிறார். இந்தக் காலகட்டத்திற்குள் தங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். தாங்கள் விரும்பிய அரசுப்பணி கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******************

எனக்கு 7 1/2 சனி எப்பொழுது தொடங்கும்? அப்பொழுது சந்திர தசையும் வருமா? இந்தக் காலகட்டத்தில் நான் பரிகாரம் எதாவது செய்யவேண்டுமா? – எஸ்.மோகன்ராம், சேலம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மோகன் ராம் அவர்களே!

64 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அனுஷம், ராசி விருச்சிகம், லக்னம் மிதுன் ஆகும். விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு நவம்பர் 2011 முதல் ஏழரை சனி துவங்குகிறது. தங்களின் ஜாதகப்படி, சந்திர திசை, சந்திர புக்தி 21.07.2011 வரை நடைபெறுகிறது. தாங்கள் சனிக்கிழமை தோறும் அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபட்டு வரவும்.
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

*******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response

About The Author

1 Comment

  1. sethuram

    ஒரு ஜத்கதில் மரனம் யெப்படி சரியக கனிபடு, எனடு நன்பர் ஒருர்த்ர் தன் குலன்டை பெரபில் சந்தெகம் ஜடரிதியில் இதை யெப்படி கன்டுபிடிபதூ” அவர் டி.என்.ஏ. மோலம் இதை தெரிந்துகொன்டார் ஆனால் ஜதம் யெப்படி இர்ருகும்”

Comments are closed.