ஜோதிடம் கேளுங்கள்

என் வீட்டருகில் உள்ளவர்களால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. என் நிலை மாறுமா அல்லது வேறு இடம் மாற வேண்டுமா? – ஜி. பூங்கொடி, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி பூங்கொடி அவர்களே !

45 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் குரு 9-ம் இடத்தில் இருப்பதால், எந்தப் பிரச்சினையையும் முறியடிக்க, தெய்வ பலம் தங்களுக்குத் துணையாய் இருக்கும். தாங்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வருவதோடு, ஞாயிற்றுக்கிழமைதோறும் பைரவருக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து வர, குடும்பத்தில் அமைதியும், வளமும் நிலவும். நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******************


எனக்கு குழந்தைப் பேறு எப்போது கிடைக்கும்? – கோகிலா, பள்ளிப்பாளையம்.

அன்பு நிலாச்சாரல் வாசகி கோகிலா அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம்,லக்னம் கன்னி ஆகும். தங்களுக்கு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டமச் சனி நவம்பர் 2011-ம் மாதம் முடிகிறது. இதற்குப் பிறகு தங்களுக்கு புத்திர பாக்யம் உண்டாகும். சஷ்டி அன்று சென்னிமலை சென்று முருகனுக்கு உகந்த தேனையும், தினை மாவையும் நிவேதனமாக அளிக்கவும். தாங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வம் கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******************

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism, D.H.A சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response

About The Author