ஜோதிடம் கேளுங்கள்

என் மாமா பெண்ணை விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். ஆனால் என் மாமா மறுக்கிறார். எங்களுக்கு திருமணம் நடக்குமா? எப்பொழுது நடக்கும்? – கணேசன், அரியலூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் கணேசன் அவர்களே!
28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் மகரம் ஆகும். தங்களின் ஜாதகப்படி, தங்களின் விருப்பம் நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இல்லை. தங்களின் திருமணம் 2010 ஜனவரிக்குப் பின் கை கூடும். நல்ல வாழ்க்கை அமைய நிலாச்சரலின் வாழ்த்துக்கள்.

*****

எனக்கு கையில் காசு தங்குவதே இல்லை. பொருளாதார அளவில் நல்ல காலம் எப்போது வரும்? – ராஜ்மோகன், ஹொரானா.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ராஜ் மோகன் அவர்களே!
39 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி துலாம், லக்னம் மீனம் ஆகும். தங்கள் கையில் பணம் தங்குவதற்கு தினமும் பின்வரும் பாடலைச் சொல்லி வாருங்கள்.
"நன்மலரைச் சூட்டியே நா மணக்கச் செப்பினேன்
பொன்பொருளை ஈந்திடுவாய் வெள்ளியே எந்தனுக்கு
இன்பத்தைத் தந்து எழில்வழியே நீ காட்டி, அன்பான ஆசி கொடு"

திருமகளின் அருளாசி கிட்ட, நிலாச் சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

எனக்கு 14.11.2006-ல் திருமணம் நடந்தது. ஆனால் அன்றிலிருந்து எனக்கு என் மனைவியிடம் சிறிதளவுக்குக் கூட அன்பு (காதல்) இல்லை. இன்னும் சில காரணங்களால் நான் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக மணமுடிக்க எண்ணுகிறேன். அது சிறப்பாக அமையுமா? – அக்பர் பாஷா, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகர் அக்பர் பாஷா அவர்களே!
35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சுவாதி. ராசி துலாம், லக்னம் ரிஷபம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் தங்களின் லக்னாதிபதியும், களத்திரக் காரகனான சுக்ரனும், 7-ம் வீட்டில் இருப்பதால், மகிழ்ச்சியான மண வாழ்க்கை உண்டு. இரண்டாவது திருமணம் என்பதைப் பற்றி நினையாமல், தாங்கள் திருமணம் செய்த மனைவி மேல் அன்பைப் பொழியுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நல்ல இல்லறம் அமைய, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எனக்குத் திருமணமாகி 7 வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதேபோல, எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்குவதே இல்லை. இதற்கு ஒரு நல்வழி காட்டவும் – வசந்தி, மலேசியா

அன்பு நிலாச்சாரல் வாசகி வசந்தி அவர்களே!
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் அசுவினி, ராசி மேஷம், லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் 5-ம் வீட்டில் கேது இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் நாக தேவதையை வழிபட்டு வருவது நலம். புத்திர பாக்கியத்தை நல்கும் குரு பகவானுக்கு, வியாழன் தோறும் கணவன் மனைவி இருவர் பேரிலும் அர்ச்சனை செய்து,
"பெருநிறைச் செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கள் யாவும்,
வருநிறை மரபுநீ வாய்க்குஞ் சந்ததி தழைக்க,
தருநிறை ஆடை ரத்னந்தான் பெற அருளும் தேவ,
குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல் தலைக் கொள்வோமே!"
என்ற பாடலை படித்து வருங்கள்.

தற்பொழுது 10-ல் இருக்கும் குரு, கோசார ரீதியாக தங்கள் ராசியிலிருந்து 11-ம் இடத்திற்கு செல்லும் காலம், குழந்தை பாக்யம் கிட்டும். பணம் கையில் தங்குவதற்கு திருமகளின் துதி சொல்லி வாருங்கள். மழலைச் செல்வம் பெறுவதற்கும், கையில் பணம் தங்குவதற்கும், நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. வைகுண்டராஜா

    தாங்கள் எங்களின் எதிர்காலத்தை வளமாக்க வழி சொல்லுவதால் நான் மனமார்ந்த நன்றி

Comments are closed.