ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. ஒரு அபார்ஷ‌ன் ஆகிவிட்டது. எப்போது குழந்தை பிற‌க்கும்? – ஷாலினி, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி ஷாலினி அவர்களே!
25 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஹஸ்தம், ராசி கன்னி, லக்னம் மேஷம் ஆகும். தங்களின் ஜாதகப்படி 03.09.2009 வரை ராகு திசை சந்திரபுத்தி நடைபெறும். இதன் பிறகு வரும் செவ்வாய் புக்தி தங்களுக்கு புத்திர பாக்கியத்தை நல்கும். தங்களின் ஜாதகத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால், தாங்கள் வெள்ளிக்கிழமை தோறும் தங்கள் குல தெய்வத்தோடு, நாக தேவதையையும் வழிபட்டு வாருங்கள். அடுத்த குழந்தை கலையாமல் தங்க, கருகாக்கும் அன்னையாம் கர்ப்பரக்ஷாம்பிகையை மானசீகமாக நினைத்து, தினமும் நெய்தீபம் ஏற்றி வரவும். விரைவில் மழலைச் செல்வம் மடியில் தவழ, நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

இபோது எனக்கு ராகு திசை நடக்கிறது. எனக்கு வேலை எப்போது கிடைக்கும்? எந்த விதமான வேலை கிடைக்கும்? திருமணம் என் விருப்படி நடக்கும்மா? – ஆர்த்தி, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி ஆர்த்தி அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகப்படி 27.01.2010 வரை சனி திசை ராகு புத்தி நடைபெறும். இதன் பிறகு வரும் குரு புக்தியில் தங்கள் திருமணம் கை கூடும். திருமணம் தங்கள் விருப்பப்படி நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பொதுஜனத் தொடர்புடைய வேலை, சனிப்பெயர்ச்சிக்குப் பின் கிடைக்கும். விரைவில் நல்ல வேலை கிடைப்பதற்கும், திருமணம் கை கூடுவதற்கும் நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

நான் எப்பொழுது வெளிநாடு செல்வேன்? எனது திருமணம் எப்பொழுது நடைபெறும்? – கவிதா, பல்லடம்
அன்பு நிலாச்சாரல் வாசகி கவிதா அவர்களே!
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி கும்பம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகப்படி கோசார குரு டிசம்பர் மாதம் முதல் தங்கள் ஜாதகத்தில் உள்ள குருவை ஓராண்டு காலம் பார்ப்பார். இந்தக் காலம் தங்களுக்கு, வெளிநாட்டுக்கு செல்லுதல் மற்றும் திருமண பாக்கியம் ஆகிய இரண்டையும் தந்துவிடும். தங்கள் மனம் போல் வாழ்க்கை அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

01.07.2009 மாலை 06.25 அன்று எனக்கு பெண் குழந்தை பிறந்தது. என்ன பெயர் வைக்கலாம்? – புருஷோத்தமன், ராமநாதபுரம்
அன்பு நிலாச்சாரல் வாசகர் புருஷோத்தமன் அவர்களே!
தங்கள் பெண் குழந்தையின் நட்சத்திரம் ஸ்வாதி 2-ம் பாதம், ராசி துலாம் ஆகும். ‘ரே’ என்று துவங்கும் ரேவதி, ரேகா போன்ற பெயர்களில் ஒன்றை தங்கள் குழந்தைக்கு வைக்கலாம். குழந்தை நல் ஆரோக்கியம் பெற்று நலமாக இருக்க, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. T Ramesh

    ஏன்னுடய பிரந்த நேரம் 29 01 1986 அன்ரு மாலை 4.49க்கு.என்னால் பனக்காரன் ஆக முடிஉமா?

Comments are closed.