ஜோதிடம் கேளுங்கள்

என் திருமண வாழ்க்கை பற்றி அறிய விரும்புகிறேன். – சங்கீதா, சென்னை.

அன்பு நிலாச்சாரல் வாசகி சங்கீதா அவர்களே !

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம். லக்னம் ரிஷபம். தங்களின் ஜாதகத்தில், குரு 11-ல், தன் சொந்த வீட்டில், ராகுவுடன் உள்ளார். எனவே தங்களின் திருமண வாழ்வு வளமாக இருக்கும்.

*****************

எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. எனக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? – எம். ப்ரியாதேவி, திருப்பூர்.
அன்பு நிலாச்சாரல் வாசகி ப்ரியா தேவி அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம் மற்றும் லக்னமும் மீனம். ஆகும். தங்களின் ஜாதகத்தின் லக்னாதிபதியான குருவை, மே 2012 முதல், கோசார குரு, 7-ம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே 2012, ஆகஸ்டு மாதத்திற்குள் ,குழந்தை பாக்யம் கிட்டும். பிரதோஷம் தோறும் நந்திக்கு, அருகம்புல் மாலை சூட்டி, வணங்கி வரவும். விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*******************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

****************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A .சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response. “

About The Author

2 Comments

  1. SAVITHRI

    அம்மா வனக்கம்,
    எனகு எபொலுது திருமனம் நடக்கும். என் வயது 23. கும்பராசி,சதய நட்சதிரம்.10.05.1988 என்பது நான் பிரன்த வருடம். எனக்கு, காதல் திருமனம் நடக்குமா? என்னுடன் பனி புரிந்தவர் மேல் எனக்கு காதல் வன்து விட்டது. ஆனால் அவர் கிரிச்டியன். நான் கின்டு.என்கல் திருமனம் நடக்கும? உன்கல் பதிலுக்கு காத்திருக்கும் அன்பு வாசகி.

Comments are closed.