விடுகதைகள்

விடைகள் பக்கத்தின் இறுதியில்..

1. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?

2. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?

3. என்னுடைய நிறம் கருப்பு. மிகுந்த தேடலுக்குப் பின் நான் கிடைப்பேன். என்னை கண்டறிந்த பிறகு என்னுடைய கவசத்திடமிருந்து பிரித்தெடுப்பார்கள். நான் யார்?

4. நான் மயிலிறகைவிட மென்மையானவன். ஆனால் மனிதர்கள் அதிக நேரம் என்னை பிடித்து வைக்க முடியாது. நான் யார்?

5. எனக்கு உயிரில்லை. ஆனால் நான் வளர்வேன். எனக்கு நுரையீரல் கிடையாது. ஆனால் எனக்கு காற்று மிகவும் அவசியம். எனக்கு வாயில்லை ஆனால் பல கைகள் உண்டு. நான் யார்?

6. இருட்டறைக்குள் என்னை அழைத்துச் சென்று என்மேல் தீயை வைப்பார்கள். நான் அழுவேன். பிறகு என்னுடைய தலை துண்டிக்கப்படும். நான் யார்?

7. ஒரே இடத்தில் இருப்பேன். எனக்குத் தொண்டை கிடையாது. ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?

8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

9. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

10. இது பேசினால் கேட்கமுடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. ஆனால் இதனால் சுவாசிக்க முடியாது. அது என்ன?

விடைகள்:
1. துவாரம்
2. காற்று
3. நிலக்கரி
4. சுவாசம்
5. தீ
6. மெழுகுவர்த்தி
7. நீர்வீழ்ச்சி
8. தென்றல்
9. அமைதி
10. கோவில் மணி

About The Author

5 Comments

  1. usha rani

    உஷ ரனி- விடுகடை யெல்லம் நல்ல யெருகு.

Comments are closed.