அனாடமிக் தெரபி (34)

புற்றுநோய்!

கடந்த வாரம், நம் உடலில் இரண்டு வகையான அறிவு உள்ளது என்றும், முதலாவது, நோய்க்கிருமிகளை அழிக்கும் அறிவு என்றும், அது கெட்டுப்போனால் ஏற்படுவதுதான் எய்ட்ஸ் என்பதையும் பார்த்தோம்.

இரண்டாம் அறிவு கெட்டுப்போனால் ஏற்படுவது புற்றுநோய்!

நமது உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து செல்களும் தம்மைத் தாமே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதுப்பித்துக் கொள்கின்றன. குடல்கள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறையும், வெள்ளையணுக்கள் 13 நாட்களுக்கு ஒரு முறையும் புதுப்பித்துக் கொள்கின்றன. சிவப்பணுக்கள் 120 நாள், கல்லீரல் 1 வருடம், இவ்வாறு, சராசரியாக 1 வருடத்தில் அனைத்து உறுப்புகளும் புதுப்பித்துக் கொள்கின்றன. இந்தப் புதுப்பித்துக் கொள்ளும் அறிவு கெட்டுப்போனால் புற்றுநோய் வரும். ‘கேன்சர்’ என்றால் உடலில் உறுப்புக்கள் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ளும் அறிவு கெட்டுப்போய்விட்டது என்று பொருள்.

உதாரணமாக, இரத்தத்தில் வெள்ளையணுக்கள் 13 நாட்களில் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நம் உடலில் ஓர் அறிவு இருக்கும். அந்த அறிவு கெட்டுப் போய்விட்டால் 13 நாட்களில் புதுப்பிக்க வேண்டிய அறிவு தவறுதலாக 330 நாட்களில் புதுப்பிப்பதாக அறிவை மாற்றிக் கொண்டால் என்னாகும்?

இரத்தத்தில் வெள்ளையணுக்கள் புதுப்பிக்கப்படுவது தாமதமாகும். அதனால், வெள்ளையணுக்களின் அளவு குறையும். பொதுவாக, 4500-இலிருந்து 11,500 வரை வெள்ளையணுக்கள் இருக்க வேண்டும். ஆனால், 4500-க்கும் கீழே எண்ணிக்கை குறையும். இதற்குப் பெயர் ‘இரத்தப் புற்றுநோய்’ (Blood Cancer).

13 நாட்களில் புதுப்பிக்கப்பட வேண்டிய வெள்ளையணுக்கள் 13 நிமிடம் என மாறிவிட்டால் என்ன ஆகும்? சீக்கிரம் சீக்கிரம் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.

தேவையில்லாமல் அப்போது இரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும். 11,500 என்ற அளவு அதிகமாகி 1 இலட்சம் 2 இலட்சம் வரை சென்றுவிடும். இதுவும் இரத்தப் புற்றுநோய்தான்.
எனவே, இரத்தப் புற்றுநோய் என்பது வெள்ளை அணுக்களைப் புதுப்பிக்கும் அறிவை உடல் இழந்து விட்டது என்பதன் அர்த்தம். உடலுக்கு வெள்ளையணுக்களைப் புதுப்பிக்கும் அறிவைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியுமே தவிர, ஹீமோதெரப்பியின் மூலம் வெள்ளையணுக்கள் அதிகமாக இருந்தால் குறைப்பதும், குறைவாக இருந்தால் அதிகரிப்பதும் என்று கண்ட்ரோல் செய்தால் இரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது. நோயின் அளவு அதிகம்தான் ஆகும்.

இதே போல், எலும்பில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் தாமதமாகப் புதுப்பித்தால் செல்கள் அழுகிப்போகும். குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரம் புதுப்பித்தால் அந்த எலும்பு வீங்கிப்போகும். இதற்குப் பெயர் ‘எலும்புப் புற்று நோய்’ (Bone Cancer).

இப்படி, குறிப்பிட்ட நாளில் செல்களைப் புதுப்பிக்காமல் தாமதமாகப் புதுப்பித்தாலோ மறந்து போனாலோ அதற்குப் பெயர் புற்றுநோய். செல்கள் புதுப்பிக்கும் நாள் தாமதமானால் அழுகிப்போகும். விரைவாகப் புதுப்பித்தால் வீங்கிப்போகும்.

இப்படி நுரையீரல் தன்னைப் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் நுரையீரல் புற்றுநோய் என்று பெயர். கண் தன் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் கண் புற்றுநோய். இப்படி, உடலில் எந்த உறுப்பு தன்னைப் புதுப்பிக்கும் அறிவை மறந்து விடுகிறதோ அல்லது கெட்டுவிடுகிறதோ அந்த உறுப்பில் புற்றுநோய் என்று கூறுகிறார்கள்.

நோய்க்கிருமியை அழிக்கும் அறிவு கெட்டுப்போனால் எய்ட்ஸ்; உறுப்புகளைப் புதுப்பிக்கும் அறிவு கெட்டுப்போனால் புற்றுநோய்.

மருத்துவர்கள் நோயாளிகளைத் தனியாக அழைத்துச் சென்று உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் புற்றுநோய் / எய்ட்ஸ் வந்து விட்டது என ‘டமால்’ என்று போட்டு உடைப்பார்கள்.

நோயைக் குணப்படுத்த முடியுமா என்று கேட்டால், முடியாது இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். சரியான மருந்து மாத்திரை இருக்கிறதா என்று கேட்டால், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை; அது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். பின்னர் நான் என்னதான் ஆவேன் என்று கேட்டால், நீங்கள் கண்டிப்பாக இறந்து போய்விடுவீர்கள் என்று நமக்கு நாள் குறித்துத் தருவார்கள். ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்! புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை குணப்படுத்தச் சரியான மருந்து மாத்திரையும் கிடையாது, குணப்படுத்தவும் முடியாது, இறந்துதான் போவீர்கள் என்று கூறி மருத்துவர்கள் சிகிச்சைக்கு மட்டும் தினமும் வாருங்கள், பல ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டுச் சிகிச்சை அளிக்கிறார்களே இது என்ன நியாயம்?

ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மருத்துவர் நமக்குத் தேவையா?
புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போகும்போது அதைக் குணப்படுத்தத் தெரியாமல், கண்ட்ரோல் செய்கிறோம் என்று மருந்து மாத்திரை சாப்பிடுவதே நோய்க்கு முதல் படி. அடுத்து, இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறையும்போது அல்லது இல்லாமல் போகும்போது தவறான வைத்தியத்தைப் பயன்படுத்தினால் நோய் இரண்டாவது படிக்குச் செல்கிறது. இரத்தத்தின் அளவு குறையும்போது மீண்டும் தவறான வைத்தியத்தைப் பயன்படுத்தினால் மூன்றாவது படியை எட்டுகிறது. மனது கெட்டுபோகும்போது மருந்து மாத்திரை மூலமாகவோ, தவறான சிகிச்சை மூலமாகவோ உங்கள் மனதைக் கண்ட்ரோல் செய்ய நினைத்தால் நோய் நான்காவது படியைத் தொடுகிறது. இந்த நான்கு படிகளைக் கடந்து உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் என்ற ஐந்தாவது படிக்குத் தள்ளப்படுகிறோம். எனவே, உலகில் உள்ள அனைத்து உயிர்க்கொல்லி நோய்களுக்கும் இப்போது உலகில் உள்ள தவறான மருத்துவமே காரணம்!

உலக மருத்துவர்கள்தான், தாங்கள் இந்தத் தவறான வைத்தியங்கள் செய்கிறோம் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக புற்றுநோய், எய்ட்சுக்கு வேறு ஏதேதோ காரணங்களைச் சொல்லி, நமக்குத் தவறான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துத் திசை திருப்புகிறார்கள். எனவே, தயவு செய்து எந்த நோயையும் கண்ட்ரோல் செய்யாதீர்கள்! ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்தால் அதன் கடைசி விளைவு புற்றுநோய் எய்ட்ஸாகத்தான் இருக்கும்.

புற்றுநோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு உலகத்தில் மருந்து கிடையாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். உங்களிடம் மருந்து இல்லை, உங்களுக்குத் தெரியாது, உங்களால் குணப்படுத்த முடியாது என்பதற்காக உலகிலேயே மருந்து இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்த முடியவில்லை என்பதற்காக உலகத்திலேயே மருந்து இல்லை என்று கூறலாமா? தயவு செய்து அப்படிக் கூறவேண்டாம்! எனக்குத் தெரியாது, என்னிடத்தில் மருந்து இல்லை, நான் இருக்கும் மருத்துவத்துறையில் இதற்கு மருந்து இல்லை எனக் கூறி வேறு எங்காவது, வேறு யாரிடமாவது, வேறு மருத்துவமுறையில் இதனைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்கு மனித உயிர்கள்தான் கிடைத்தனவா?

புற்றுநோய், எய்ட்ஸ் ஆகியவை மனிதனைக் கொல்வது கிடையாது. இந்த நோய்க்கு மருந்து இல்லை, மாத்திரை இல்லை, இறந்துதான் போவீர்கள் என்று மருத்துவர்கள் கூறும் அந்த வார்த்தைதான் மனிதர்களுடைய உயிரைக் குடிக்கிறது. எனவே, உயிர்க்கொல்லி நோய்கள் யாருக்காவது வந்தால் தயவு செய்து அதை அவர்களிடம் கூறாதீர்கள்! அவருக்குத் தெரியாமல் இருந்தால் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார். குணப்படுத்த முடியாத நோய் என்று தவறாகப் புரிந்து கொண்டால் அவர் மனது பாதித்து, மனது உடலைப் பாதித்து வேகமாக நோய் பெரிதாகிறது.
ஒரு மருத்துவருக்கோ அல்லது அவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கோ உயிர்க்கொல்லி நோய்கள் வந்தால், எங்கள் மருத்துவ முறைப்படி இதைக் குணப்படுத்த முடியாது என்று அவர் உயிரைப் போக்கிக் கொள்வாரா? அல்லது மற்ற மருத்துவத்தில் எங்காவது குணப்படுத்த முடியாதா என்று தேடி ஓடுவாரா? எனவே, தயவு செய்து எந்த மருத்துவராக இருந்தாலும் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று தயவு செய்து கூறாதீர்கள்! என்னால் முடியாது வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுங்கள். உங்களால் முடியாது என்பதற்காக உலகத்தில் யாராலும் முடியாது என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

சர்க்கரை நோயைக் கூடக் குணப்படுத்தத் தெரியாத எந்த ஒரு மருத்துவராலும் புற்றுநோய், எய்ட்ஸ் ஆகியவற்றைக் குணப்படுத்த முடியாது. எனவே, அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி நீங்கள் உங்கள் மனதைக் கெடுத்து உடலைக் கெடுத்து நோயைப் பெரிதாக்காதீர்கள்! புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களைக் கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும்! ஆனால், மருந்து மாத்திரை மூலம் கண்டிப்பாக முடியாது! மருந்து, மாத்திரை இல்லாமல் சுலபமாக நீங்கள் நினைத்தால் கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும்!

இந்தத் தொடரை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக நீங்களே உங்கள் நோய்களைக் கண்டிப்பாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். உயிர்க்கொல்லி நோய்கள் வந்தவர்கள் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினால் மட்டுமே குணப்படுத்த முடியும். எனவே, தயவு செய்து நம்புங்கள்! அந்த நம்பிக்கை உங்கள் மனதிற்கு வலுச் சேர்க்கும், உடலுக்கு வலுச் சேர்க்கும். உடல் முழுவதையும் குணப்படுத்தும்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author