குறுங்கவிதைகள்(6)

நடக்கும் போதெனில்

தெரியாத் தூரம்

நிற்கும் போதினில்

தெரிகிறது.

****

சிரிக்கும்போது

பிறரை உணர்கிறேன்

அழும் போது

என்னை!

****

ரயில்ப் பாடகனாய்

எனக்குள்

வந்து போகிறது

கவிதை!

****

அநாதைப் பிணம்,

வேட்டியுருவிய நிர்வாணம்

மூடி மறைத்தன

ஈக்கள்.

****

இரு கையால்

உழை

ஒரு கையால்

சாப்பிடு

****

‘ நன்றி மீண்டும் வருக ‘

ஒண்ணுக்கு வந்தால்

வருகிறேன்.

About The Author

1 Comment

Comments are closed.